தொடர் விடுமுறையால் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் போலீஸ்..!

தொடர் விடுமுறையால் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் போலீஸ்..!

தொடர் விடுமுறை காரணமாக தென்காசி மாவட்டம் மெயின் அருவியில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. 

தொடர் விடுமுறை காரணமாக களைகட்டிய குற்றாலம்:

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் களைகட்ட துவங்கி உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் குற்றாலம் ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. குற்றாலம் மெயின் அருவியில் அபாய வளைவை நெருங்கி சீரான அளவு தண்ணீர் விழுகிறது. இந்நிலையில் தொடர் விடுமுறை காரணமாக அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர்...   

பொதுமக்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் போலீசார்: 

இதனால் நுழைவு வாயில் முதல் அருவி கரை வரை பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்து வருகின்ற்னர். இந்நிலையில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்காக மக்கள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் போலீசார் பாதுகாப்பு மிகவும் குறைவாக இருப்பதால் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.