பெரம்பலூரில் இரட்டைக்கொலை... குற்றவாளிகள் கைது... நகைகள் மீட்பு...

பெரம்பலூரில் இரட்டைக்கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, நகைகள் மீட்கப்பட்டது.

பெரம்பலூரில் இரட்டைக்கொலை... குற்றவாளிகள் கைது... நகைகள் மீட்பு...

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 7 லட்சம் மதிப்பிலான நகைகளை பறிமுதல் செய்து உரியவரிடம் ஒப்படைத்தனர்.

குன்னம் அருகேயுள்ள அல்லிநகரம் பகுதியை சேர்ந்தவர்கள் பெரியசாமி - அறிவழகி தம்பதி. கடந்த ஜூன் மாதம் இவர்களது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், இருவரையும் கொலை செய்து விட்டு வீட்டில் இருந்த 16 சவரன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், சந்துரு , மகேஷ், யுவராஜ் உள்பட 6 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை பறிமுதல் செய்து உரியவரிடம் ஒப்படைத்தனர்.