திமுக-வின் மிரட்டலுக்கு அஞ்ச வேண்டாம்: அதிமுக ஐ.டி. பிரிவுக்கு அறிவுரை

திமுக அரசு தொடுக்கும் வழக்குகளைக் கண்டு அச்சப்பட வேண்டாம் என அதிமுக தொழில்நுட்ப அணி நிர்வாகிகளுக்கு செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் அறிவுரை வழங்கினார்.

திமுக-வின் மிரட்டலுக்கு அஞ்ச வேண்டாம்: அதிமுக ஐ.டி. பிரிவுக்கு அறிவுரை

திமுக அரசு தொடுக்கும் வழக்குகளைக் கண்டு அச்சப்பட வேண்டாம் என அதிமுக தொழில்நுட்ப அணி நிர்வாகிகளுக்கு செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் அறிவுரை வழங்கினார்.

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், மதுராந்தகம் வடக்கு ஒன்றியம், மாமண்டூர் பகுதியில் மாவட்ட அதிமுக சார்பில் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில்  திமுக அரசு, தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை. ஆட்சியில் நிலவும் குறைகளின் உண்மைத்தன்மையை ஆராய்ந்த பிறகே, அதுகுறித்து சமூக வலைதளங்களில் கருத்துப் பதிவு செய்கிறீர்கள். ஆனாலும் அதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. எனவே அதிமுக ஐ.டி. பிரிவு நிர்வாகிகள் மீது திமுக அரசு பொய் வழக்குகளைப் பதிவு செய்கிறது. அதைக்கண்டு நிர்வாகிகள் யாரும் அஞ்ச வேண்டாம் எனவும் இந்த வழக்குகளை கட்சியின் வழக்கறிஞர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றும் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகம் கூறினார்.

மேலும், இந்த ஆலோசனை கூட்டத்தில் வழக்கறிஞர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.