நாடாளுமன்ற தேர்தலுக்குள் அனைவரும் ஒன்று சேர்ந்து வெற்றி பெறுவோம்...சூளுரைத்த சசிகலா!

நாடாளுமன்ற தேர்தலுக்குள் அனைவரும் ஒன்று சேர்ந்து வெற்றி பெறுவோம்...சூளுரைத்த சசிகலா!

அதிமுகவின் தோல்விக்கு பிரிந்து இருப்பது தான் முக்கியமான காரணம் என்றும், அனைவரையும் ஒன்று சேர்ப்பதற்கு தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருப்பதாகவும் வி.கே.சசிகலா தெரிவித்தார். 

திருவாரூரில் அதிமுக நகர செயலாளர் ஆர்டி. மூர்த்தி மகளுக்கும் திருமதி சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவகுமாரின் மகனுக்கும் இன்று திருவாரூர் தனியார் திருமண அரங்கில் நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருமதி சசிகலா அவரது சகோதரி இளவரசி  சகோதரர் திவாகரன் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றம் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட ஏராளமான பங்கேற்றனர். 

இதையும் படிக்க : சூதாட்ட தடை சட்ட மசோதாவின் 8 பக்க அறிக்கை...ஆளுநருக்கு அனுப்பப்படவுள்ளதாக தகவல்?

தொடர்ந்து அங்கு செய்தியாளர்களை சந்தித்த சசிகலாவிடம்,  சட்டசபையில் ஓ பன்னீர்செல்வம் பேசும்பொழுது அதிமுக எனக் கூறினார், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி அதிமுக என்று எப்படி ஓபிஎஸ் கூறலாம், நாங்கள் ஒருவர்தான் அதிமுக என கேள்வி எழுப்பினார். இந்த மோதல் தொடர்ந்தால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் திமுகவிற்கு சாதகமான சூழ்நிலை ஏற்படும் என நீங்கள் கருதுகிறீர்களா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த சசிகலா, நிச்சயம் ஏற்படாது அப்படி ஏற்படும் அளவிற்கு நான் விடமாட்டேன். நிச்சயமாக எல்லோரும் ஒன்றிணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம் என கூறினார். தற்பொழுது அதிமுகவின் தோல்விக்கு பிரிந்து இருப்பது தான் முக்கியமான காரணம் என்று கூறியவர், அனைவரையும் ஒன்று சேர்ப்பதற்கு நான் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்குள் அனைவரும் ஒன்று சேர்ந்து அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என சூளுரைத்தார்.