நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு!

பள்ளிக் கல்வித் துறை இயக்குநருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை முடித்து வைத்தது. 

கடையநல்லூர் அருகே உள்ள அச்சம்பட்டி நடுநிலைப் பள்ளியில்  ஆசிரியராக பணியாற்றுபவர் கலைச்செல்வி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 2019 ஆண்டு தாக்கல் செய்த மனுவில், அச்சம்பட்டி நடுநிலைப் பள்ளியில் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் ஆசிரியராக பணியாற்றி வருவதாகவும் இடைப்பட்ட (2003) காலத்தில் நிர்வாக பிரச்சனையால் பணி இடை நீக்கம் செய்யப்பட்டேன். பின்னர் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு மீண்டும் பணியில் சேர்ந்தேன். எனவே எனது பணி காலத்தை கணக்கில் கொண்டு பணி வரன்முறை செய்தும் தனக்கு வரவேண்டிய ஊதிய உயர்வு பதவி உயர்வு நிலுவைத் தொகை உள்ளிட்ட அரசின் அனைத்து சலுகைகளையும் வழங்க உத்தரவிட கோரி கடந்த 2019 ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரணை செய்த உயர் நீதிமன்றம் மனுதாரர் கோரிக்கை குறித்து பரிசீலனை செய்து உரிய முடிவெடுக்க உத்தரவு பிறப்பித்தது. ஆனால் நீதிமன்றம் பிறப்பித்த கால கடுவுக்குள் பள்ளிக்கல்வித்துறை சார்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த 2021 ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அப்பொழுது பள்ளி கல்வித்துறை தொடக்க கல்வி இயக்குனராக இருந்த  அறிவொளி தரப்பில் நீதிமன்ற உத்தரவை மூன்று மாதத்தில் நிறைவேற்றப்படும் என உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்தார். ஆனால் இதுவரை மனுதாரரின் கோரிக்கை நிறைவேற்றப்படாததால் மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானத் முன் விசாரணைக்கு வந்தது. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத தற்போதைய  பள்ளி கல்வித்துறை இயக்குனர் அறிவொளி நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார்.

அப்பொழுது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தின் உத்தரவு கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டு விட்டது என தெரிவித்தார்.

அதனை ஏற்க மறுத்த நீதிபதி 2019 ஆம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது அடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரி மூன்று மாதத்தில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதாக உறுதிமொழி கொடுத்துள்ளார் ஆனால் அவரது உறுதிமொழி இதுவரை நிறைவேற்ற வில்லை தற்போது நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டு விட்டது என்று கூறுவதை ஏற்க முடியாது என தெரிவித்தார்.


மேலும் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத இதுபோன்ற அதிகாரிகளுக்கு ஆதரவாக பேச வேண்டாம் இது அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக உள்ளது.  நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தால் அதை நிறைவேற்றுவதான்  அதிகாரிகளின் கடமை எனவே தவறு செய்யும் அதிகாரிகளுக்கு அரசு வழக்கறிஞர்கள் துணை போக வேண்டாம் என தெரிவித்தார்.

மேலும் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த பள்ளி கல்வி துறை இயக்குனர்  அறிவொளியிடம் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத உங்கள் மீது ஏன் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது என நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்பொழுது பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது தவறுதான் அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் இனி நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவேன் என தெரிவித்தார்.

"அப்போது நீதிபதி தமிழ்நாடு அரசின் கீழ் பல துறைகள் உள்ளது ஆனால் பள்ளிக்கல்வித்துறையில் தான் அதிக நீதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வருகிறது. இத்துறையில் உள்ள அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை மதிப்பதில்லை" என தெரிவித்து உங்களது மன்னிப்பை நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது. ஆனால் எதிர்காலத்தில் உங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு இல்லாத அளவிற்கு நீதிமன்ற உத்தரவுகளை முறையாக பின்பற்ற வேண்டும் என கூறி அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிக்க: உலகின் மிக பெரிய இந்து கோயில் அக்டோபரில் திறப்பு..!