சைலேந்திரபாபு, கரண் சின்ஹா, பிரதீப் வி.பிலிப், சஞ்சய் அரோரா, சுனில்குமார் சிங், கந்தசாமி, ஷகில் அக்தர், பிரமோத்குமார், ராஜேஷ்தாஸ், பிரஜேஜ் கிஷோர் ரவி, சங்கர் ஜிவால், முனைவர் ஏ.கே.விஸ்வநாதன், இந்த 11 உயரதிகாரிகளில் தகுதியான அதிகாரி யார் என்பது குறித்து வரும் திங்கள்கிழமை டெல்லியில் மத்திய பணியாளர் தேர்வாணையக் குழு ஆலோசனை நடத்தவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறைச் செயலாளர் ஆகியோர் வரும் 27 ஆம் தேதி டெல்லி புறப்பட்டுச் செல்கின்றனர்.