கொரோனா தொற்றின் தினசரி பாதிப்பு 1,585 ஆக குறைவு...

தமிழகத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்து 600க்கு கீழ் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றின் தினசரி பாதிப்பு 1,585 ஆக குறைவு...

தமிழகத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்து 600க்கு கீழ் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் நேற்று ஆயிரத்து 585 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 4 ஆயிரத்து 74 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 18 ஆயிரத்து 603 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வைரஸ் பரவியவர்களில் நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 842 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 50 ஆயிரத்து 710 ஆக உயர்ந்துள்ளது. ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 34 ஆயிரத்து 761 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்ற மேலும் 165 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.