திமுக அரசின் பட்ஜெட் மக்களுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் இல்லை - எல். முருகன்

திமுக அரசின் பட்ஜெட் மக்களுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் இல்லை - எல். முருகன்

மத்திய அமைச்சர் எல்.முருகன் இன்று காலை திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டார்.

விஐபி பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட்ட அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. கோவில் வேத பண்டிதர்கள் அவருக்கு வேத ஆசி வழங்கினர். பின்னர் கோவிலில் இருந்து வெளியில் வந்த அவர் செய்தியாளர்களுடன் பேசினார். அப்போது, திமுக அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. திமுக அரசின் பட்ஜெட் மக்களுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் இல்லை.

மேலும் படிக்க | அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்: தடை விதிக்க கோரிய வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

 கடந்த பட்ஜெட்டில் பட்டியலின மக்களின் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை அரசு முழுவதுமாக செலவு செய்யவில்லை. இது பற்றி எங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் சட்டமன்றத்தில் கேள்விகள் இருக்கிறார்.தேர்தல் சமயத்தில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் தலா 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று திராவிட முன்னேற்ற கழகம் தேர்தல் வாக்குறுதி அளித்தது.ஆனால் இப்போது தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே தலா 1000 ரூபாய் வழங்கப்படும் என்று அரசு கூறுகிறது.

மேலும் படிக்க | சோதனை ஓட்டத்தில் அத்தி கடவு அவினாசி திட்டம் : அமைச்சர் விளக்கம்

 இந்த விஷயத்தில் அவர்கள் தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற  வேண்டும். ராகுல் காந்தியின் தகுதி இழப்பு விஷயம் நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து முழுக்க முழுக்க சட்டப்படி நடைபெற்றுள்ளது என்று அப்போது அவர் கூறினார்.