அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் அதிமுகவை திமுக பழி வாங்குகிறது: ஈபிஎஸ்-ஓபிஎஸ் கண்டனம்
அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் அதிமுகவை திமுக பழி வாங்குவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் குற்றச்சாட்டியுள்ளனர்.

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் விமரிசையாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்று பங்குனி உத்திர திருவிழா. முருகன் கோயில்களில் மட்டுமின்றி அனைத்து குலதெய்வ கோயில்களிலும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
இதையும் படிக்க : ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் வீட்டில்... லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை...!
இந்நிலையில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு வருகின்ற ஏப்ரல் 5ஆம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், பொதுதேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடைபெறும் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கன்காணித்தனர். அப்போது தமிழகத்தை சேர்ந்த 2 பயணிகள் மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது அவர்களை நிறுத்தி விசாரித்தனர் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடைமைகளை சோதனை செய்தனர்.
மேலும் படிக்க | புதிய உயரம் தொடும் ஐஸ்வர்யா மேனன்
அப்போது உடமைகளில் இருந்த கூடையில் லேசாக அசைவது போல் தெரிந்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் திறந்து பாா்த்தனா். அதில் அரிய வகை உயிரினங்கள் இருப்பதை கண்டு பிடித்தனர்.
மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள சதுப்பு நில காடுகளில் வசிக்கும் டி பிரஸ்ஸாவின் குரங்கு, நைஜீரியா, கென்யா, உகாண்டா போன்ற நாடுகளில் வாழும் மாண்டட் கெரேசா என்ற குரங்கு, மத்திய மற்றும் தென் அமெரிக்கா, மெக்சிகோ, பிரேசில் ஆகிய நாடுகளில் வாழும் சிலந்தி குரங்கு என அரிய வகை 4 குரங்கு குட்டிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது பற்றி பயணியிடம் விசாரித்த அபூர்வ வகை குட்டிகள். இதை வளர்க்க எடுத்து வந்திருக்கிறேன் என்று கூறினார். ஆனால் விலங்குகளுக்கான எந்த ஆவணங்களும் மருத்துவ பரிசோதனை செய்து நோய்க் கிருமிகள் ஏதாவது இருக்குதா? இல்லையா? என்பதற்கான சான்றிதழ் ஆகியவை இல்லை.
மேலும் சர்வதேச வனவிலங்குகள் பாதுகாப்பு துறையின் தடையில்லா சான்றிதழ் பெற்று இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு இந்திய வனவிலங்கு துறை இடமும் அனுமதி பெற்று அதற்கான சான்றிதழ்களும் இருக்க வேண்டும்.
மேலும் படிக்க | சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் விமர்சனங்களுக்கு மூத்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள் - முதல்வர்
எந்தவிதமான சான்றிதழ்களும் இல்லாததால் 4 குரங்கு குட்டிகளை பறிமுதல் செய்தனர். பின்னர் சென்னையில் உள்ள மத்திய வனவிலங்கு குற்றப்பிரிவு துறை அதிகாரிகள் வந்து பார்த்த போது இவை அபூர்வ வகையை சேர்ந்தது.
மேலும் இதையடுத்து குரங்கு குட்டிகளை மீண்டும் மலேசிய நாட்டிற்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி நிதியை சரியாக பயன்படுத்த வேண்டும் -எம். எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்வர் பேசியவை.திமுக எம். எல்.ஏ.க்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று மாலை நடைபெற்றது.
மேலும் படிக்க | ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் வீட்டில்...லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை
சட்டமன்றத்தில் நாளை மறுநாள் பட்ஜெட் மீதான விவாதமும்,29 ம் தேதி முதல் மானிய கோரிக்கை விவாதமும் தொடங்க உள்ள நிலையில்,பேரவை விவாதத்தின் போது பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ள நிலையில்
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திமுக எம்.
எல்.ஏ.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் எம்.
எல்.ஏ.க்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு ஆலோசனை வழங்கி உள்ளார்.
கூட்டத்தில் எம். எல்.ஏ.க்கள் மத்தியில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின் ;-
எதிர்க்கட்சிகள் என்றால் விமர்சிக்க தான் செய்வார்கள் அவையில் உறுப்பினர்கள் அமைதியாக இருக்க வேண்டும்.எதிர்க்கட்சிகள் விமர்சிக்கும் பட்சத்தில் மூத்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள்.சட்டமன்ற உறுப்பினர் தங்கள் தொகுதி நிதியை சரியாக பயன்படுத்த வேண்டும், சட்டமன்றத்தில் பேசும் போது புகழ்ந்து பேச வேண்டாம் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாநகராட்சி ஆணையராக உள்ள சிவக்குமார், ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் அதிகாரியாகவும் பணியாற்றி இருந்தார். இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்பு பல்லாவரம் நகராட்சி ஆணையராக பணியாற்றிய போது, முறைகேட்டில் ஈடுபட்டதாக சிவக்குமார் மீது புகார்கள் எழுந்தன.
இதையும் படிக்க : ஆன்லைன் சூதாட்டம் குறித்த சட்டம் இயற்ற மாநிலங்களுக்கு அதிகாரம் உண்டு! மத்திய அரசு ஒப்புதல்!!
அதன் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர், ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை அண்ணா நகரை அடுத்த திருமங்கலம் பகுதியை சேர்ந்த 55 வயதான குமார், அதேபகுதியில் உள்ள 6 வயது சிறுமியிடம், தன் வீட்டு மாடியில் பூனைகள் இருப்பதாக கூறி, மாடிக்கு அழைத்து சென்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதை தெரிந்துகொண்ட தாய் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், போக்சோ சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பதிவான வழக்கில் குமார் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சென்னை போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் டி.ஜி. கவிதா ஆஜராகி வாதிட்டார்.
மேலும் படிக்க |
நீதிபதி பிறப்பித்த உத்தரவில், குமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். மேலும், அபராத தொகையை சிறுமிக்கு வழங்க உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.