பழைய இரும்பு குடோனில் சிலிண்டர் வெடித்து விபத்து...!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள பழைய இரும்பு குடோனில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்து...

பழைய இரும்பு குடோனில் சிலிண்டர் வெடித்து விபத்து...!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவர் பழைய இரும்பு உள்ளிட்ட பொருட்கள் சேகரித்து விற்பனை செய்யும் தொழிலை மேற்கொண்டு வருகிறார். இதனைத் தொடர்ந்து இவரது குடோனில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள பழைய மது பாட்டில்கள், இரும்பு பொருட்கள், லாரி கார் உதிரி பாகங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை பிரிக்கும் பணியில் குடோனில் ஆறு பேர் வேலை பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நிலையில் இன்று மதிய நேரத்தில் இவரது குடோனில் இருந்து புகையுடன் தீ பற்றியது. இதையடுத்து தீ மளமளவென பரவி  குடோன் முழுவதும் பரவியது. இதனைப் பார்த்த பணியாளர்கள் அலறி அடித்தபடி வெளியே வந்தனர். பின்னர் குடோன் முழுவதும் தீப்பற்றி எரிய தொடங்கியதில், குடோனில் இருந்த சிலிண்டர் மிகுந்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த  தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இருப்பினும் இந்த தீ விபத்தில் விற்பனைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்ட 10 லட்ச ரூபாய் மதிப்பிலான இருசக்கர வாகனம் மற்றும் பழைய இரும்பு உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. மேலும் இச்சம்பவம் குறித்து தீயணைப்பு வீரர்கள் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து தீ விபத்து நிகழ்ந்த இடம் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் இருப்பதால், பொதுமக்கள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தியது . இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.