மயங்கி விழுந்த நபரை மருத்துவமனையில் சேர்த்த பெண் காவல் ஆய்வாளருக்கு குவியும் பாராட்டு...

சென்னை டி.பி.சத்திரம் கல்லறையில் மயங்கிக் கிடந்த நபரைப் பெண் காவல் ஆய்வாளர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயங்கி விழுந்த நபரை மருத்துவமனையில் சேர்த்த பெண் காவல் ஆய்வாளருக்கு குவியும் பாராட்டு...

சென்னையில் தொடர்மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கியவர்களை மாநகராட்சி ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் பேரிடர் மீட்புக்குக் குழுவினர் மீட்டு நிவாரண முகாம்களில் தங்கவைத்து வருகிறார்கள்.

இந்நிலையில், டி.பி.சத்திரம் கல்லறையில் மரம் விழுந்து விட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது உள்ளே பணிபுரியும் ஊழியர் மயக்க நிலையில் இருந்ததை கண்ட பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி, அவரை தோளில் தூக்கிக்கொண்டு தமது வாகனத்தில் ஏற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதற்கிடையில் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியின் இந்த செயலுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்