தொண்டர் மீது கல்லெறிந்த அமைச்சர் நாசர்....கிண்டலுடன் விமர்சித்த அண்ணாமலை!!!

தொண்டர் மீது கல்லெறிந்த அமைச்சர் நாசர்....கிண்டலுடன் விமர்சித்த அண்ணாமலை!!!

முதலமைச்சர் பங்கேற்கவுள்ள நிகழ்ச்சிக்கான இடத்தை பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு செய்தார். ஆய்வு நடைபெற்ற போது தொண்டர் மீது அமைச்சர் மண் கட்டியை எடுத்து எறிவது போன்ற காட்சி பதிவாகியது.

காரணம் என்ன?:

ஆய்வு நடைபெற்ற இடத்தில் அமைச்சர் அமர நாற்காலி எடுத்து வருவதற்கு தாமதமானதால் கடுப்பாகிய அமைச்சர் தொண்டர் மீது மண் கட்டியை வீசியதாக தகவல் வெளியாகியது.  சீக்கிரம் எடுத்து வரவில்லை என்று கூறி மண் கட்டியை தூக்கி எறியக்கூடிய காட்சி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  

உடனடியாக சேரை எடுத்து வர வேண்டும் எனக் கூறி கல்லை தூக்கி எறிந்த சம்பவம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.  இதைக் குறித்து கட்சி சார்பிலும் அமைச்சர் சார்பிலும் எவ்வித விளக்கமும் அளிக்கப்படாமலிருந்த நிலையில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

விமர்சனம்:

அமைச்சர் நாசர், தொண்டர்கள் மீது கல்லை வீசிய வீடியோவை இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ”இந்திய வரலாற்றில், ஒரு அமைச்சர் மக்கள் மீது கல்லெறிவதை யாராவது பார்த்திருக்கிறார்களா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.  

-நப்பசலையார்

இதையும் படிக்க:  முதலில் பாஜக ஜெயலலிதா காலில்....தற்போது?!!