கோவாக்சின் தடுப்பூசிகள் கையிருப்பு இல்லை

தமிழகத்தில் கோவாக்சின் தடுப்பூசிகள் கையிருப்பு இல்லாததால், 2-வது நாளாக கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே செலுத்தப்பட்டு வருகின்றன. 

கோவாக்சின் தடுப்பூசிகள் கையிருப்பு இல்லை

தமிழகத்தில் கோவாக்சின் தடுப்பூசிகள் கையிருப்பு இல்லாததால், 2-வது நாளாக கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே செலுத்தப்பட்டு வருகின்றன. 

தமிழகத்தில் தொடர்ந்து தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வரும் சூழ்நிலையில் கோவாக்சின் தடுப்பூசிகள் கையிருப்பு இல்லை. இதனால், 2-வது நாளாக இன்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்படவில்லை. மேலும், நேற்று கூடுதலாக 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்துள்ளன.  இந்நிலையில், சென்னையில் உள்ள தடுப்பூசி மையங்களில் கோவிஷீட்டு தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தப்பட்டு வருகின்றன. சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள புலியூர் அரசு பள்ளியில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.