தம்பதி கழுத்தறுத்து கொலை..தலைமறைவான அதிமுக ஒன்றிய செயலாளரை வலைவீசித் தேடும் போலீசார்.! 

தம்பதி கழுத்தறுத்து கொலை..தலைமறைவான அதிமுக ஒன்றிய செயலாளரை வலைவீசித் தேடும் போலீசார்.! 

பொம்மிடி அருகே ஓய்வுபெற்ற ஆசிரியர் தம்பதி கழுத்தறுத்து படுகொலை செய்த 3 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை தேடிவருகின்றனர்.  

தருமபுரி மாவட்டம் பொம்மிடி அடுத்த பில்பருத்தி - தாளநத்தம் சாலையில் கிருஷ்ணன், சுலோக்ஷனா தம்பதியினர் வசித்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் வீட்டிற்கு வெளியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 6 பேர் பணத்திற்கு  ஆசைப்பட்டு கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ஹரீஸ், பிரகாஷ்ராஜ் மற்றும் முகேஷ் ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள அ.தி.மு.க. ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வேலவன், சந்துரு மற்றும் எழிலரசன் ஆகிய 3 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.