பேருந்தில் 30 பவுன் அபேஸ்! கண்டுபிடித்து தரக்கோரி தம்பதி தர்ணா!!  

சென்னை அடுத்த மாங்காட்டில் பேருந்தில் காணமல் போன 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை மீட்டு தர கோரி தம்பதி காவல் நிலையத்தில் அமர்ந்து தீடீர் தர்ணாவில் ஈடுப்பட்டனர்.

பேருந்தில் 30 பவுன் அபேஸ்! கண்டுபிடித்து தரக்கோரி தம்பதி தர்ணா!!   

சென்னை அடுத்த மாங்காட்டில் பேருந்தில் காணமல் போன 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை மீட்டு தர கோரி தம்பதி காவல் நிலையத்தில் அமர்ந்து தீடீர் தர்ணாவில் ஈடுப்பட்டனர்.

சென்னை அடுத்த மாங்காடு அருகே பட்டு பகுதியில் வசித்துவரும் ஈஸ்வரன் ராஜேஸ்வரி தம்பதி. இதில் ராஜேஸ்வரி கடந்த ஜனவரி மாதம் சொந்த ஊரான காரைக்குடிக்கு சென்று விட்டு சென்னை திரும்பிய நிலையில், தனது கைப்பையில்  70 லட்சம் மதிப்பிலான 30 சவரன் தங்க நகைகளை எடுத்து வந்துள்ளார். பின்னர் பேருந்திலிருந்து இறங்கி ஆட்டோ மூலம் வீட்டிற்கு வந்த நிலையில் தனது கைப்பையில் உள்ள நகைகள் காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து போலீசில் புகார் அளித்த நிலையில் விசாரணையில் தொய் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த தம்பதி விரைந்து நடவடிக்கை எடுத்து காணாமல் போன தங்களது நகைகளை மீட்டு தருமாறு காவல்நிலைய வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுப்பட்டனர்.