பஞ்சு விற்பனை மதிப்பு மீதான சந்தை நுழைவு வரி ரத்து... மேலும் ஒரு கோரிக்கை வைத்த பஞ்சு வியாபாரிகள்...
பஞ்சு மற்றும் கழிவு பஞ்சு விற்பனை மதிப்பு மீதான சந்தை நுழைவு வரியை ரத்து செய்த தமிழக முதல்வருக்கு ராஜபாளையம் பஞ்சு வியாபாரிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நேரு சிலை அருகே பஞ்சு மார்க்கெட் உள்ளது இராஜபாளையத்தில் நூற்பாலைகள் மற்றும் பஞ்சு விற்பனை அதிகமாக நடைபெறுவதால் இந்த பகுதிக்கு பஞ்சு மார்க்கெட் என்று அழைக்கப்படுகிறது அந்த அளவுக்கு இங்கு பஞ்சு வியாபாரம் அதிகளவில் நடைபெற்று வருகிறது . இங்கு தமிழகத்தில் விளையக்கூடிய பருத்தி மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்தியை பிரித்து பஞ்சாக மற்றி விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சு விற்பனை மதிப்பு மீது சந்தை நுழைவு வரி ஒரு சதவீத வரி செலுத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில், சட்டப்பேரவையில் 110 விதியின் படி, முதலமைச்சர் மு க ஸ்டாலின் பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சு விற்பனை மதிப்பு மீதான சந்தையின் ஒரு சதவீத வரியை நேற்று ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பஞ்சு மார்க்கெட் நேரு சிலை அருகே அனைத்து பஞ்சு வியாபாரிகள் . வில்லோ ஃபேக்டரி உரிமையாளர்கள் சார்பில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் பஞ்சின் மேல் உள்ள ஒரு சதவீத விற்பனை மதிப்பு சந்தை நுழைவு வரியையும் ரத்து செய்ய வேண்டும் எனவும் அப்போது அவர்கள் கோரிக்கை வைத்தனர்.