அதிகரிக்கும் கொரோனா தொற்று... தமிழகத்தில் புதிதாக 1,985 பேருக்கு கொரோனா தொற்று...

தமிழகத்தில் தற்போது 20 ஆயிரத்து 185 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதிகரிக்கும் கொரோனா தொற்று... தமிழகத்தில் புதிதாக 1,985 பேருக்கு கொரோனா தொற்று...

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் நேற்று ஆயிரத்து 985 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 71 ஆயிரத்து 383 ஆக அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் தற்போது 20 ஆயிரத்து 185 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வைரஸ் பரவியவர்களில் நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 908 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 16 ஆயிரத்து 938 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 34 ஆயிரத்து 260 ஆக அதிகரித்துள்ளது.  சென்னையில் நேற்று மேலும் 189 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.