தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழர்களின் குடும்பத்திற்கு கொரோனா நிவாரண தொகை... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்...

தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழர்கள் குடும்பத்திற்கு ரூ.4000 கொரோனா நிவாரண தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக 5 நபர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழர்களின் குடும்பத்திற்கு கொரோனா நிவாரண தொகை... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்...
கொரோனா ஊரடங்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு சார்பில் 4,000 ரூபாய் நிவாரண தொகை வழங்கும் திட்டம் 2 கட்டமாக தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது.
 
அதைத் தொடர்ந்து தமிழக முகாமிற்கு வெளியே இருக்கக்கூடிய இலங்கை தமிழர்கள் குடும்பத்திற்கு 4 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் சென்னை தலைமை செயலகத்தில் இன்று தொடங்கி வைத்தார்.
 
முதல் கட்டமாக ஐந்து இலங்கை தமிழர்களுக்கு 4000 ரூபாய் வழங்கினார்.
 
இத்திட்டத்தின் மூலம் தமிழக முகாமிற்கு வெளியே உள்ள 13,553 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க 5 கோடி 42 லட்ச 12 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.