கொரோனா இறப்பை குறைத்து காட்டவில்லை.! சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்.! 

கொரோனா இறப்பை குறைத்து காட்டவில்லை.! சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்.! 

கொரோனா தொற்றால் ஏற்படும் இறப்பை குறைத்து காட்டவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்

சென்னை ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு மருத்துவத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் கொரோனா புறநோயாளிகள் பிரிவு , கட்டுபாட்டு மையம், இறப்பு சான்றிதழ் திருத்தம் மேற்கொள்ளும் மையம் , படுக்கை வசதிகளை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா குறைந்தாலும் போர்கால அடிப்படையில் பணிபுரியவேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் கூறியுள்ளார். தற்போது சராசரியாக 1.6 லட்சம் மாதிரிகள் எடுக்கப்பட்டு 4200 என்ற அளவில் பாதிப்பு குறைந்துள்ளது. தற்போதைய தளர்வுகளை தொடரவேண்டுமானால் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கவேண்டும்,சமூக இடைவெளி, கைகழுவுதல், முககசவம் உள்ளிட்டவற்றை கட்டாயம் கடைபிடிக்கவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

மேலும், காய்ச்சல் கண்காணிப்பு பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறார்கள். கண்காணிப்பு பணிகளை மாவட்ட வாரியாக பிரித்து தொடர்ந்து பணிகள் மேற்கொண்டு வருகிறோம். சில இயக்கங்கள் அரசு கொரோனா இறப்பை மறைப்பதாக சொல்கிறார்கள் அப்படி எதுவும் நடைபெறவில்லை. அரசின் சார்பில் வழங்கப்படும் இறப்பு சான்றிதழில் இறப்பிற்கான காரணம் குறிப்பிடப்படுவதில்லை என்றும் தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் சான்றிதழில் இறப்பின் காரணம் மாற்றி எழுதப்பட்டிருந்தால் ஐசிஎம்ஆர் விதிகளின்படி கட்டளை மையம் மூலம் திருத்திக் கொள்ளலாம் என்றும் கூறினார்.