தமிழகத்தில் புதிதாக 945 பேருக்கு கொரோனா பாதிப்பு...

தமிழகத்தில் புதிதாக 945 பேருக்கு கொரோனா பாதிப்பு. கொரோனா தொற்றுக்கு 15 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் புதிதாக 945 பேருக்கு கொரோனா பாதிப்பு...

தமிழகத்தில் புதிதாக 945 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 6 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் ஒருநாள் பாதிப்பில் அதிகபட்சமாக சென்னையில் 112 பேரும், கோவையில் 107 பேரும், செங்கல்பட்டில் 83 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒரே நாளில் ஆயிரத்து 47 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து குணமடைந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 59 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒரே நாளில் 15 பேர் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு 36 ஆயிரத்து 191 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனாவுக்கு 10 ஆயிரத்து 895 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.