உஷாரா இருங்க: கொரோனா மீண்டும் பரவ வாய்ப்பு? சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை!!

கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

உஷாரா இருங்க: கொரோனா மீண்டும் பரவ வாய்ப்பு? சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை!!

கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கையானது சற்று அதிகமாக காணப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அந்த மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். குறிப்பாக கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், மதுரை, திருவண்ணாமலை, மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தொற்று பாதிப்பானது மீண்டும் அதிகரித்து காணப்படுவதன் காரணமாக அந்த பகுதிகளில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை வேண்டும் என்று கூறியுள்ளார்.