பயனாளிகளிடம் அரசின் திட்டம் சென்றடைவதை உறுதி செய்ய ஆலோசனை...அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட முதலமைச்சர்!

பயனாளிகளிடம் அரசின் திட்டம் சென்றடைவதை உறுதி செய்ய ஆலோசனை...அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட முதலமைச்சர்!

அரசின் திட்டங்கள் பயனாளிகளிடம் சென்றடைவதை உறுதிசெய்ய வேண்டுமென, சிறப்புத் திட்ட செயலாக்கத்துறையின் செயல்பாடுகள் தொடர்பான ஆலோசனையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறையின் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தொய்வு ஏற்பட்டிருந்ததாக குற்றம் சாட்டினார். மதுரை கலைஞர் நூலகம், கிண்டி கிங்ஸ் மருத்துவமனைப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும், கடந்த 20 மாதங்களில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இதையும் படிக்க : நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இன்று உரையாற்ற உள்ளார் பிரதமர் மோடி...!

தொடர்ந்து, அதிகாரிகள் மட்டத்தில் கூட்டங்களை நடத்தி உடனடியாக அடுத்தடுத்த திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.