சாதிக் கயிறு கட்டும் பிரச்னை.. 12-ம் வகுப்பு மாணவன் கொலை.. அலட்சியமாக செயல்பட்ட 2 பள்ளி ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்!

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவனை சாதிக் கயிறு கட்டும் பிரச்னையில் சகமாணவர்கள் அடித்து கொலை செய்த விவகாரத்தில் 2 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

சாதிக் கயிறு கட்டும் பிரச்னை.. 12-ம் வகுப்பு மாணவன்  கொலை.. அலட்சியமாக  செயல்பட்ட 2 பள்ளி ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்!

திருநெல்வேலி மாவட்டம் பாப்பாகுடி பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் செல்வசூர்யா என்பவர் பள்ளக்கால் புதுக்குடிஅரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

சாதிக் கயிறு கட்டுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இவருக்கும் ப்ளஸ் 1 படிக்கும் மாணவர்களான சைபுதீன், பவுசில் சமீர், சுடலை மணி ஆகிய மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில்  செல்வசூர்யா கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இதுகுறித்து பாப்பாக்குடி போலீசார்  3 மாணவர்கள் மீதும் கொலை உள்பட 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் அலட்சியமாக  செயல்பட்ட பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் தமிழ்ச்செல்வன் மற்றும் ஷீபா பாக்கியமேரி ஆகிய இருவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி உத்தரவிட்டுள்ளார்.