நடிகை சாந்தினியால் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது மணிகண்டன் மீதான புகார்...!

நடிகை சாந்தினியால் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது மணிகண்டன் மீதான புகார்...!

முன்னாள் அமைச்சர் மணிகண்டன்  மீது  பாலியல் புகார் கொடுத்த நடிகை சாந்தினி, மீண்டும் அவரை தேடி வீட்டுக்கு வந்த போது உறவினர்கள் விரட்டியதால் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தார்.
  
மணிகண்டன் மீதான பாலியல் வழக்கு:

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்த மணிகண்டன் மீது துணை நடிகை சாந்தினி பாலியல் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அவர், பின்னர் நிபந்தனை ஜாமினில் வெளிவந்தார். அதே நேரத்தில் திடீரென மணிகண்டன் மீதான வழக்கை நடிகை சாந்தினி வாபஸ் பெறுவதாக நீதிமன்றத்தில் அறிவித்தார். அப்போது இந்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையும் படிக்க: அரியலூரில் எழுச்சி நடைப்பயணம்...ஏன் தெரியுமா?அன்புமணி ராமதாஸ் அறிக்கை!

சாந்தினியால் மீண்டும் விஸ்வரூபம்:

இந்த நிலையில் நடிகை சாந்தினி மீண்டும் மணிகண்டனை சந்திக்க ராமநாதபுரத்தில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, அவரது ஆதரவாளர்கள் சாந்தினியை விரட்டி அடித்தனர். இதனையடுத்து தனக்கு அனைத்து வசதியும் செய்து தருவதாக கூறி வழக்கை வாபஸ் பெற வைத்து விட்டு தற்பொழுது என்னை ஏமாற்றிவிட்டதாக நடிகை சாந்தினி  காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். இதனால் முன்னாள் அமைச்சர் வீடு அருகே பரபரப்பான சூழல் நிலவியது. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான புகார், தற்போது சாந்தினி தொடர்ந்த புதிய வழக்கால் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.