ஓட்டுநர் - நடத்துனர் மீது தாக்குதல் நடத்திய கல்லூரி மாணவர்கள்..! பேருந்தை இயக்காமல் போராட்டத்தில் குதித்த அரசு பஸ் ஊழியர்கள்!!

படிக்கட்டில் தொங்கியதை நடத்துனர் கண்டித்ததையடுத்து கல்லூரி மாணவர்கள் நடத்துனர் மற்றும் ஓட்டுனரை தாக்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

ஓட்டுநர் - நடத்துனர் மீது தாக்குதல் நடத்திய கல்லூரி மாணவர்கள்..! பேருந்தை இயக்காமல் போராட்டத்தில் குதித்த அரசு  பஸ் ஊழியர்கள்!!

பேக்குளத்திலிருந்து விருதுநகர் சென்ற அரசு பஸ்சில் கல்லூரி மாணவர்கள் சிலர் படிக்கட்டில் தொங்கியவாறே நீண்ட தூரம் பயணித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த நடத்துனர் மாணவர்களை கண்டித்துள்ளார். உடனே கல்லூரி மாணவர்கள் சேர்ந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனர் இருவரையும் தாக்கியுள்ளனர். 

இதனையடுத்து மாணவர்கள் தாக்கியதால் 50க்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்காமல் அரசு பேருந்து ஒட்டுநர்களும், நடத்துனர்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் அரசு பேருந்தை இயக்க மறுத்து போராட்டம் நடத்தி வரும் ஓட்டுனர் - நடத்துனர் இருவர்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். 

இறுதியாக சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் உறுதி அளித்ததை தொடர்ந்து, போராட்டம் தற்போது கைவிடப்பட உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. இதனிடையே மாணவர்கள் தாக்கியதில் காயமடைந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.