தந்தையுடன் சென்ற கல்லூரி மாணவி யானை தாக்கி பலி!  

கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை மாறாமலை பகுதியில் யானை மிதித்து தாக்கியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தையுடன் சென்ற கல்லூரி மாணவி யானை தாக்கி பலி!   

கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை மாறாமலை பகுதியில் யானை மிதித்து தாக்கியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை அருகே உள்ள மாறாமலையை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் ஸ்ரீனா, கல்லூரி மாணவியான ஸ்ரீனாவும் அவரது தந்தை மணிகண்டனும் கடந்த மாதம் 20ஆம் தேதி கீரிப்பாறையில் இருந்து மாறாமலை பகுதியில் உள்ள தங்களது டீ கடைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென வந்த காட்டு யானை ஒன்று இருவரையும் தாக்கியது. இதில் பலத்த காயங்களுடன் இருவரும் மீட்கப்பட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

இந்நிலையில் மணிகண்டன் குணமடைந்த நிலையில், ஸ்ரீனா கூடுதல் சிகிச்சைக்காக 4 தினங்களுக்கு முன்னர் திருவனந்தபுரத்திலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.