சுத்தமாகும் சென்னை மாநகர்... 15 மண்டலங்களில் 69,227 சுவரொட்டிகள் அகற்றம்...

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் இதுவரை 69 ஆயிரத்து 227 சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சுத்தமாகும் சென்னை மாநகர்... 15 மண்டலங்களில் 69,227 சுவரொட்டிகள் அகற்றம்...
சென்னை மாநகரை துாய்மையாக பராமரிக்க சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், பேருந்து நிழற்குடைகள், மாநகராட்சி கட்டடங்கள், பாலங்கள், தெரு பெயர் பலகைகள் உள்ளிட்ட பொது இடங்கள், சுவரொட்டிகளால் மாநகரின் அழகை சீர்குலைத்து வருவதை கருத்தில் கொண்டு மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.
 
அதன்படி, சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் இதுவரை 69 ஆயிரத்து 227 சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. குறிப்பாக, வடசென்னை பகுதியில் உள்ள 5 மண்டலங்களில் 15 ஆயிரத்து 474 சுவரொட்டிகளும், மத்திய சென்னை பகுதியில் உள்ள 5 மண்டலங்களில் 18 ஆயிரத்து 49 சுவரொட்டிகளும், தென் சென்னை பகுதியில் உள்ள 5 மண்டலங்களில் 35 ஆயிரத்து 704 சுவரொட்டிகளும் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.