இந்து மத கடவுள்களை விமர்சித்த விவகாரம்: கிறிஸ்தவ அமைப்பு தலைவர் அருமனை ஸ்டீபன் கைது...

இந்து மதக் கடவுள்களை விமர்சித்த குற்றச்சாட்டில் பங்குதந்தை ஜார்ஜ் பொன்னையாவை தொடர்ந்து, கிறிஸ்தவ அமைப்பு தலைவர் அருமனை ஸ்டீபன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்து மத கடவுள்களை விமர்சித்த  விவகாரம்: கிறிஸ்தவ அமைப்பு தலைவர் அருமனை ஸ்டீபன் கைது...

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை கிறிஸ்தவ இயக்கம் சார்பில் கடந்த 18-ஆம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பங்கு தந்தை ஜார்ஜ் பொன்னையா சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துகளை கூறி இருந்தார். பிரதமர் மோடி, இந்து மதக் கடவுள்களை விமர்சித்தும் பேசியிருந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட ஜார்ஜ் பொன்னையா, 15 நாள் நீதிமன்ற காவலில் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய அருமனை கிறிஸ்தவ அமைப்பு தலைவர் அருமனை ஸ்டீபன் என்பவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஸ்டீபன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில்  ஒரு சில இடங்களில் பதட்டங்கள் ஏற்படமால் இருக்க  போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.