இந்தியாவிலேயே முதல்முறையாக தெறிக்கவிடும் முதல்வர் ஸ்டாலின்... வியந்து பார்க்கும் மற்ற மாநில முதல்வர்கள்!!

இந்தியாவிலேயே முதல்முறையாக தெறிக்கவிடும் முதல்வர் ஸ்டாலின்... வியந்து பார்க்கும் மற்ற மாநில முதல்வர்கள்!!

கோவை இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கவச உடை அணிந்து கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நேரில் சென்று நலம் விசாரித்தார்.

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு நடத்தினார்.கடந்த சில நாட்களாக சென்னையை காட்டிலும், கோவையில் கோவிட் தொற்று அதிகரித்து வருகிறது. இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின், இன்று ஆய்வு செய்வார் என அறிவிக்கப்பட்டது.

இன்று காலை 10:00 மணிக்கு ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஐ.ஆர்.டி., மருத்துவ கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார். பின், அங்கிருந்து திருப்பூர் சென்று குமரன் கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு கூடுதல்படுக்கை வசதிகளை திறந்து வைத்ததுடன், தற்காலிக பணியாளர் நியமனத்திற்கான பணி உத்தரவுகளையும் ஸ்டாலின் வழங்கினார். இரண்டு மாவட்டங்களில் ஆய்வு முடித்துவிட்டு மதியம, 12:30 மணியளவில், முதல்வர் ஸ்டாலின் கோவை வந்தார்.கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வர மண்டலத்துக்கு 10 வீதம் 50 கார்கள் இயக்கப்படும் திட்டத்தை ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

இதனையடுத்து கோவை இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கவச உடை அணிந்து கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நேரில் சென்று நலம் விசாரித்தார். தொடர்ந்து, வெளியே வந்த அவரிடம், கொரோனா பாதித்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பதில்லை என மக்கள் புகார் மனு அளித்தனர்.