'வள்ளுவம் போல் இந்த ஓவியமும் வாழும்' ஓவியரை பாராட்டிய முதல்வர்

இரண்டு வரியில் பொருள் தரும் திருக்குறளை படைத்த திருவள்ளுவரின் உருவத்தை 741 தமிழ் எழுத்துகளை கொண்டு ஓவியமாக வரைந்த வாலிபரை பாராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ’வள்ளுவம் போல் இந்த ஓவியமும் வாழும்’ என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  

'வள்ளுவம் போல் இந்த ஓவியமும் வாழும்' ஓவியரை பாராட்டிய முதல்வர்

இரண்டு வரியில் பொருள் தரும் திருக்குறளை படைத்த திருவள்ளுவரின் உருவத்தை 741 தமிழ் எழுத்துகளை கொண்டு ஓவியமாக வரைந்த வாலிபரை பாராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ’வள்ளுவம் போல் இந்த ஓவியமும் வாழும்’ என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  

ஓவியக் கலைஞரான கணேஷ் என்பவர் திருவள்ளுவரின் மீது கொண்ட பற்றால் அவரின் உருவத்தை தமிழி எழுத்து, தமிழ் வட்டெழுத்து,தமிழ் எழுத்து என கி.பி.மூன்றாம் நூற்றாண்டில் தொடங்கி இன்றைய தமிழ் எழுத்துகள் வரை உள்ள 741 தமிழ் எழுத்துகளைக் கொண்டு ஓவியம் தீட்டியுள்ளார்.அதனை அவர் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இது குறித்து செய்தி அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது ஓவியத் திறமையைப் பாராட்டும் விதமாக “அன்பின் வழியது உயர்நிலை” என்ற அய்யன் வள்ளுவரை, தமிழ் மீது கொண்ட அன்பால் தமிழ் எழுத்துகளால் ஓவியக் காவியமாக்கிய கணேஷை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! வள்ளுவம் போல் இந்த ஓவியமும் வாழும்!” என தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.