கதக் நடனக் கலைஞர் பிர்ஜு மகாராஜ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!!

புகழ்பெற்ற கதக் நடனக் கலைஞர் பண்டித பிர்ஜு மகாராஜ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

கதக் நடனக் கலைஞர்  பிர்ஜு மகாராஜ் மறைவுக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!!

கமலஹாசன் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் படத்தில்  ‘உனைக் காணாத நானும்’ என்ற பாடலில் கதக் நடனத்தை வடிவமைத்தவர் பண்டித பிர்ஜூ மகராஜ். இப்படத்திற்காக அவருக்கு நாட்டின் 2வது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.  

இந்தநிலையில், நேற்று டெல்லியில் உள்ள அவரது வீட்டில் பேரப்பிள்ளைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரை உடனடியாக குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் மறைந்த கதக் நடன கலைஞரான அவருக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கதக் கலையின் மிகச்சிறந்த தூதராக விளங்கிய அவர், வளமான ஒரு மரபை கொடையாக விட்டு சென்றிருப்பதாகவும், அவரது மறைவு நாட்டிற்கும்,கதக் கலைக்கும் பேரிழப்பு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் நடிகர் கமலஹாசன், இந்தி நடிகை ஹேமாமாலினி உள்ளிட்டோரும் பிர்ஜு மகராஜ் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடியும், பிர்ஜு மகராஜ்  மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.