2023ஆம் ஆண்டு இறுதிக்குள் "உலக முதலீட்டாளர்கள் மாநாடு".. தமிழகத்தில் நடத்தப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு

2023ஆம் ஆண்டு இறுதிக்குள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டு இறுதிக்குள் "உலக முதலீட்டாளர்கள் மாநாடு".. தமிழகத்தில் நடத்தப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு

இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது துபாய் பயணம் குறித்தும், இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்தும் விளக்களம் அளித்தார்.

அப்போது தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்கவும், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை பெருக்கவுமே, தாம் துபாய் பயணம் மேற்கொண்டதாகவும், முதலமைச்சர் விளக்கம் அளித்தார். மேலும் தமிழகத்தை தெழில்துறையில் மேம்படுத்துவதற்காக வரும் 2023ஆம் ஆண்டு இறுதிக்குள், தமிழகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.