அடுத்த 3 மணி நேரம்...18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம் !

அடுத்த 3 மணி நேரம்...18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம் !
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 18 மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய  மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com