தென்மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு... 4 நாட்களுக்கு மிக கனமழை பெய்யக் கூடும்...

டெல்டா மாவட்டங்களில் 4 நாட்கள் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு... 4 நாட்களுக்கு மிக கனமழை பெய்யக் கூடும்...

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

நாளை புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்மிக கனமழையும், நாளை மறுதினம்,  தென்மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணிநேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.