இந்த எட்டு மாவட்டங்களில் கனமழை வெளுக்கபோகுது!

தமிழகத்தின் எட்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த எட்டு மாவட்டங்களில் கனமழை வெளுக்கபோகுது!

தமிழகத்தின் எட்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்ப சலனம் காரணமாக அரியலூர், பெரம்பலூர், கடலூர் தேனி, திண்டுக்கல் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.  

நாளை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழையும், 24 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. இன்று முதல் 26 ஆம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு   அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.