தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...
தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில், இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில், தென்மேற்கு பருவமழை காரணமாக இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்றும், மன்னார் வளைகுடா, தெற்கு மற்றும் மத்திய வங்க கடல் பகுதிகளில், இன்று மணிக்கு, 55 கி.மீ. , வேகத்தில் பலத்த காற்று வீசும். என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.