இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...

தமிழ்நாடு, புதுச்சேரியில் அநேக இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு ,ஐயம் தெரிவித்துள்ளது.

இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இன்று தமிழ்நாடு , புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | மழைநீரை பார்வையிட வந்த ஈபிஎஸ்...எதிராக கோஷம் எழுப்பிய திமுக நிர்வாகி!

அதன்படி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், இராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், கனமழைக்கு  வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

மேலும் படிக்க | கனமழையால் 200 ஏக்கர் பயிர்கள் நாசம்... விவசாயிகள் வேதனை...