தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...

தமிழகத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...

வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. 

நாளை சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கன மழைக்கும் 22-ம் தேதியன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

23 மற்றும்  24  ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ள வானிலை மையம் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.