தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு

வட அரபிக்கடலில் இன்று ஷாகீன் புயல் உருவாகும் என்பதால் இரு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு

வட அரபிக்கடலில் இன்று ஷாகீன் புயல் உருவாகும் என்பதால் இரு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'குலாப்' புயலாக மாறி கடந்த 26ம் தேதி ஆந்திராவில் கரையை கடந்தது. இந்த குலாப் புயல் தெலுங்கானா, மகாராஷ்டிரா முழுவதும் நகர்ந்தது. நேற்று தெற்கு குஜராத் மீது மையம் கொண்டிருந்தது. இந்நிலையில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, இன்றைக்குள் வட அரபிக்கடலில் புயலாக உருவெடுக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்த புயலால், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும், இந்தியா மற்றும் அதைச் சுற்றியுள்ள நாடுகளின் மீனவர்கள் இரு நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவித்துள்ளது.

ஷாகீன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் பாகிஸ்தான் நோக்கி செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.