இறந்த தொழிலாளி தடுப்பூசி போட்டதாக வந்த சான்றிதழ்...  அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர்...

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் 2 மாதங்களுக்கு முன்பு இறந்த தொழிலாளி இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதாக சான்றிதழ் வந்ததால், அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இறந்த தொழிலாளி தடுப்பூசி போட்டதாக வந்த சான்றிதழ்...  அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர்...

டி.என்.புதுக்குடி செக்கடி தெருவை சேர்ந்த 62 வயதான கூலித்தொழிலாளி மாரியப்பன், கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டார். ஆனால் 2-வது தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்வதற்கு முன்பே மாரியப்பன் இறந்து விட்டார். இந்த நிலையில் வீட்டில் உள்ள மாரியப்பனின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் சென்றுள்ளது. கொரோனா தடுப்பூசி 2 தவணைகளையும் மாரியப்பன் செலுத்திக் கொண்டதாக, குறுந்தகவல் மற்றும் சான்றிதழ் சென்றுள்ளது.

இதனை பார்த்த மாரியப்பனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 2 மாதங்களுக்கு முன்பு இறந்து போன தொழிலாளிக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் வந்திருப்பது, புளியங்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.