நள்ளிரவில் பற்றி எரிந்த குப்பை லாரி... போட்டோஸ் வைரல்!

சென்னை மாதவரம் பகுதியில் குப்பைகளை அகற்றும் லாரி நள்ளிரவில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  

நள்ளிரவில் பற்றி எரிந்த குப்பை லாரி... போட்டோஸ் வைரல்!

சென்னை மாதவரம் பகுதியில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது லாரி திடீரென தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. மாதவரம் பகுதியில் சென்னை மாநகராட்சியின் சார்பாக குப்பைகளை சேகரிக்கும் தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு சொந்தமான குப்பை லாரியின் மூலமாக  ஓட்டுனர் சரவணன் உடன் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் முனிரத்தினம் மற்றும் பாலு ஆகியோர் மாதவரம் தபால் பெட்டி அருகே குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

அப்போது திடீரென லாரி தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனால் ஓட்டுநர், துப்புரவு பணியாளர்கள் லாரியில் இருந்து இறங்கி விட, தீ லாரியின் டயர்கள் மற்றும் முன்பகுதி முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் நீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தினால் காயம், உயிரிழப்பு போன்ற பாதிப்பு ஏதும் நிகழவில்லை. ஆனால் தீயினால் லாரியின் முன்பகுதி மற்றும் டயர்கள் எரிந்து நாசமாகின. இந்த சம்பவம் தொடர்பாக மாதவரம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.