விரைவில் தொடங்குகிறது படகு சவாரி... படகுகள் சீரமைக்கும் பணி தொடக்கம்...

கன்னியாகுமரி நடுக்கடலில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் சொகுசு படகுகள் சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

விரைவில் தொடங்குகிறது படகு சவாரி... படகுகள் சீரமைக்கும் பணி தொடக்கம்...

தமிழ்நாடு கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் படகு சேவையில் எம்.எல்.குகன், எம்.எல்.பொதிகை மற்றும் விவேகானந்தா ஆகிய மூன்றுபடகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.

மேலும் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன குளிர்சாதன வசதி கொண்ட திருவள்ளுவர், தாமிரபரணி ஆகிய இரண்டு சொகுசு படகுகளும் வாங்கப்பட்டு படகுதுறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த மே மாதம் 8-ம் தேதி முதல் படகுசேவை ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் சுற்றுலாதலங்களை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வரும் சூழலில் கன்னியாகுமரி படகு துறையில் நிறுத்தப்பட்டுள்ள பயணிகள் படகு சேவை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படகுளை சீரமைக்க 25 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைப்பு செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.