சாலையை கடக்கும் போது பார்த்து கடக்கனும்.. இல்லனா இப்படி தான் ஆகும்போல!! என்ன ஆச்சின்னு பாருங்க

தோப்பூர் நான்கு வழிச்சாலையில் கார் - சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

சாலையை கடக்கும் போது பார்த்து கடக்கனும்.. இல்லனா இப்படி தான் ஆகும்போல!! என்ன ஆச்சின்னு பாருங்க

மதுரை திருமங்கலம் தாலுகா கப்பலூர் தொழிற்பேட்டையில் இருந்து இன்று காலை பொருட்களை ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் ஒன்று மதுரை மாநகருக்குள் செல்வதற்காக தோப்பூர் நான்கு வழிச்சாலையை கடக்க முயற்சித்துள்ளார்.

அப்போது மதுரை விமான நிலையம் செல்ல நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த சேகர் என்பவர் குடும்பத்துடன் 2 பெண்கள் உட்பட 5 பேர் வந்த கார் தோப்பூர் நான்கு வழிச்சாலையை கடக்க முயற்சித்த  சரக்கு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்தவர்கள் சிறு காயத்துடன் உயிர் தப்பினர் தற்போது அந்த விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.