பரோட்டா சாப்பிட்டவர் மாரடைப்பில் மரணம்- பொதுமக்கள் அதிர்ச்சி
கள்ளகுறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தில், பரோட்டா சாப்பிட்டவர் மாரடைப்பில் மரணமடைந்த சம்பவம் அப்பகுதி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலை மாவட்டம் பவித்திரம் கிராமத்தை சேர்ந்த சடகோபன் என்பவரது மகன் தாமோதரன் வயது 45. இவர் தனது சொந்த வேலை காரணமாக திருக்கோவிலூர் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையம் எதிரே உள்ள பேருந்து நிறுத்தும் இடத்தில் அமர்ந்து பரோட்டா சாப்பிட்டுள்ளார்.
சாப்பிட்டு கொண்டிருக்கும் பொழுது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து இறந்துள்ளார். பின்னர் இச்சம்பவம் குறித்து திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.