பேனர் விவகாரம்...ஈபிஎஸ்க்கு பதிலடி...அமைச்சர் வெளியிட்ட பகீர் தகவல்!

நம்ம ஊரு சூப்பரு திட்டத்திற்காக ஒரு பேனர் அச்சடிக்கப்பட்டதற்கான செலவு குறித்து ஈபிஎஸ் கூறியது உண்மைக்கு புறம்பான தகவல் என்று அமைச்சர் பெரியகருப்பன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
அரசு மீது குற்றம் சாட்டிய ஈபிஎஸ்:
”நம்ம ஊரு சூப்பரு” திட்டத்தின் ஒரு பேனர் அச்சடிக்கும் விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பதாக தமிழக அரசு மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி இருந்தார். ஏற்கனவே, இந்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள் என்று கூறியிருந்தார்.
உண்மைக்கு புறம்பான கருத்து கூறும் ஈபிஎஸ்:
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அரசின் மீது முதலமைச்சராக இருந்தவர், தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர் உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை கூறியுள்ளார். ஒரு பேனருக்கு ரூ.7,906 செலவு என கூறுவது முற்றிலும் தவறு. ஒரு பேனருக்கு ரூ.611 மட்டுமே செலவு செய்யப்பட்டது. விளம்பர பேனர் அச்சிடும் பணிகளில் எந்த ஒரு தனியார் நிறுவனமும் ஈடுபடுத்தப்படவில்லை” என்று கூறிய அவர், விளம்பர பதாகைகள் அச்சடிக்கும் பணிகள் 9 மாவட்டங்களில் நடந்ததாகவும், ஈபிஎஸ் கூறியது போல ஒரேயொரு நிறுவனத்திற்கு தரப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: ஆயிரத்து 600 ஏக்கரில் ஜவுளி பூங்கா...கருத்தரங்கில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கரும்புள்ளி குத்துவது:
தொடர்ந்து பேசிய அவர், பேனர் விவகாரத்தில் குறை கூறுவது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மீது கரும்புள்ளி குத்துவது போன்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தங்கள் தவறுகளை மறைக்க பழி போடும் ஈபிஎஸ்:
அதிமுக ஆட்சி காலத்தில் தான் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் வளர்ச்சிக்கு கேடு விளைந்ததாகவும் பெரியகருப்பன் குற்றஞ்சாட்டினார். அதுமட்டுமல்லாது, அதிமுக ஆட்சியில் 2 ஆயிரத்து 800 ரூபாய் பேனருக்கு 28 ஆயிரம் ரூபாயும், 500 ரூபாய் எல்.இ.டி பல்புக்கு 5 ஆயிரம் ரூபாயும் பில் போடப்பட்டு மோசடிகள் நடந்ததாக அவர் பகீர் தகவல்களை வெளியிட்டார். அதிமுக தங்கள் தவறுகளை மறைக்கவே திமுக மீது பழி சுமத்துவதாகவும் பெரியகருப்பன் பதிலளித்துள்ளார்.
அரசு நிலத்திற்குரிய குத்தகை பாக்கி 31 கோடி ரூபாயை சத்யா ஸ்டுடியோவிடமிருந்து வசூலிக்கவும், மீட்கப்பட்ட நிலத்தை வேலி அமைத்து பாதுகாக்கவும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அடையாறில் உள்ள சத்யா ஸ்டுடியோ நிறுவனத்திற்கு 1968ல் 93 ஆயிரத்து 540 சதுர அடி நிலத்தை தமிழக அரசு குத்தகைக்கு கொடுத்தது.1998ல் அந்த குத்தகை காலம் முடிவடைந்த நிலையில் அந்த இடத்தை தொடர்ந்து பயன்படுத்தி வந்ததால், குத்தகை காலம் மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.
சத்யா ஸ்டுடியோ
அதன்பிறகு 2004ஆம் ஆண்டு வரை 31 கோடியே 9 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் வாடகை பாக்கியை செலுத்தக் கோரி மயிலாப்பூர் வட்டாட்சியர் மூலமாக நோட்டீஸ் அனுப்பியும் செலுத்தாததால், நிலத்தை திருப்பி எடுத்து 2008ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சத்யா ஸ்டுடியோ சார்பாக நிர்வாக இயக்குனர் சுவாமிநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மேலும் படிக்க | தண்ணீர் தொட்டியில் உற்சாகமாக குளித்து விளையாடிய யானைகள்
இந்த வழக்கு நிலுவையில் உள்ளபோது, 2019ஆம் ஆண்டில் அடையாறு நோக்கி செல்லக்கூடிய பசுமை வழி சாலை மற்றும் டி.ஜி.தினகரன் சாலை ஆகியவற்றில் போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்காக, அரசு இசைக் கல்லூரி வழியாக சத்யா ஸ்டுடியோ அருகில் அமைந்துள்ள அரசு நிலத்தை அடைந்து துர்காபாய் தேஷ்முக் சாலைக்கு இணைப்பு சாலை அமைக்க அரசு திட்டம் தீட்டியது.
அரசுக்கு உத்தரவு
இந்த வழக்கு காரணமாக அந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக அரசு துறைகளுக்கு இடையே நில பரிமாற்ற திட்டங்கள் நிலுவையில் இருந்துவந்தன.
இந்த நிலையில் 2008ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், அரசுக்கு செலுத்த வேண்டிய 31 கோடியே 9 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் வாடகை பாக்கியை வசூலிக்க தேவையான அனைத்து நடவடிக்கையும் மூன்று மாதத்தில் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்
மேலும், சத்யா ஸ்டுடியோ அருகில் உள்ள அரசு நிலத்திற்கு வேலி அமைத்து பாதுகாக்கவும், 2019ஆம் ஆண்டு திட்டப்படி இணைப்பு சாலை அமைக்கும் பணியை தொடரவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்
காலை சிற்றுண்டி திட்டத்தை தொடக்கி வைத்ததன் மூலம் வாழும் "காமராஜர் முக ஸ்டாலின்"என்று முதலமைச்சரை நாடு பாராட்டுகிறது- தலைமை கொறடா கோ.வி.செழியன்
முதலமைச்சர் மு க ஸ்டாலின் 70 வது பிறந்தநாளை கொண்டாடும் பொதுவாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் சென்னை எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சியானது எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது
மேலும் படிக்க | ராகுல் காந்தி பதவி நீக்கம் - விமானநிலையம் முற்றுகை போராட்டம்
இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் தமிழக அரசு தலைமை கொறடா கோ.வி.செழியன் மற்றும் வர்த்தக அணி செயலாளர் காசிமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.
எழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 150 மாணவர்களுக்கு இந்த நிகழ்ச்சியில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
மேலும் படிக்க | நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை - அமைச்சர் கே.என்.நேரு!
அரசு தலைமை கொறடா கோ.வி செழியன்:
பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை துவங்கி வைத்தவர் முதலமைச்சர் அதனால் தான் "வாழும் காமராஜர் முக ஸ்டாலின்" என்று நாடு பாராட்டுகிறது என பேசினார்
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து சென்னை விமான நிலையத்தை முற்றுகையிட்ட இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் லெனின் பிரசாத் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமரை குறித்து அவதூறாக பேசியதற்காக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது உடனடியாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்
மேலும் படிக்க | ஆவின் தயிரில் தமிழுக்கு பதில் இந்தியில் அச்சிட முடியாது - அமைச்சர் பதிலடி
இதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பலகட்ட போராட்டத்தை முன்னெடுத்து இருக்கின்றனர்
தமிழகத்திலும் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக சென்னை விமான நிலையத்தை இளைஞர் காங்கிரஸை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் தலைமையில் முற்றுகையிட்டனர்
அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் மீறி விமான நிலையத்திற்குள் நுழைய முயன்ற காங்கிரஸரை தடுப்பு காவலில் காவல்துறையினர் கைது செய்தனர்.
தயிர் பாக்கெட்டுகளில் ‘தஹி’ என இந்தியில் அச்சிட வலியுறுத்தும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் ஏற்க முடியாது என அமைச்சர் சா.மு.நாசர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஒரே நாடு ஒரே மொழி என்ற கொள்கையை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தையும் இந்தியில் பெயர் வைக்கும் பா.ஜ.க அரசு, பிற மொழிகளை தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது.இது தவிர ஒன்றிய அரசின் அலுவலங்களில் இந்தியை பயன்படுத்த சொல்வது, அலுவல் பூர்வ கடித பரிமாற்றம் போன்றவற்றுக்கு ஆங்கிலத்துக்கு பதில் இந்தியை பயன்படுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
சில தினங்களுக்கு முன்னர் பணியாளர் தேர்வாணையத்தால், ஒன்றிய அரசின் துறைசார் பணியிடங்களுக்கு நடத்தப்படும் CGL தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது. இதற்கு திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
அதைத் தொடர்ந்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, மத்தியப் பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்து தொழில்நுட்ப அல்லது தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழி கட்டாயமாக ஹிந்தியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டின் ஆவின் மற்றும் கர்நாடகாவின் நந்தினி தயிர் பாக்கெட்டுகளில் தமிழில் ‘தயிர்’ கன்னடத்தில் ‘மோசரு’ மற்றும் போன்ற வார்த்தைகளை தவிர்த்து அதற்கு பதிலாக “தஹி” என்ற இந்தி வார்த்தையை பயன்படுத்த வேண்டும். வேண்டுமென்றால் அடைப்பு குறிக்குள் தமிழ் மற்றும் கன்னட வார்த்தைகளை பயன்படுத்தலாம் என ஒன்றிய அரசின் உணவுப் பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது
ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பு தென்மாநிலங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சமூகவலைத்தளங்களில் இந்த அறிவிப்புக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த விதியை பின்பற்றாத பட்சத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஆவின் மற்றும் நந்தினி அமைப்புகளின் உரிமைகளை ரத்து செய்யும் வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | ஆவின் தயிர் - தஹி இனிமேல் தேவையில்லை
இதையடுத்து கர்நாடக அரசின் நந்தினி சார்பாக இதற்கு விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது. அதேபோல் தமிழ்நாடு அரசின் ஆவின் சார்பாகவும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இதுதொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ”தயிர் பாக்கெட்டுகளில் ‘தஹி’ என இந்தியில் அச்சிட வலியுறுத்தும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் ஏற்க முடியாது. ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் தமிழில் ‘தயிர்’ என்றே தொடர்ந்து குறிப்பிடப்படும்” என திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க | நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை - அமைச்சர் கே.என்.நேரு!
பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஒரே நாடு ஒரே மொழி என்ற கொள்கையை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தையும் இந்தியில் பெயர் வைக்கும் பா.ஜ.க அரசு, பிற மொழிகளை தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது.இது தவிர ஒன்றிய அரசின் அலுவலங்களில் இந்தியை பயன்படுத்த சொல்வது, அலுவல் பூர்வ கடித பரிமாற்றம் போன்றவற்றுக்கு ஆங்கிலத்துக்கு பதில் இந்தியை பயன்படுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.சில மாதங்களுக்கு முன்னர் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, மத்தியப் பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்து தொழில்நுட்ப அல்லது தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழி கட்டாயமாக ஹிந்தியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
மேலும் படிக்க | மாற்றுத்திறனாளி வாங்கிய நான்கு சக்கர வாகனத்திற்கு வரி விலக்கு - உயர் நீதிமன்ற உத்தரவு
நிலைமை இப்படி இருக்கும் போது இரு நாட்களுக்கு முன்னர் தமிழ்நாட்டின் ஆவின் மற்றும் கர்நாடகாவின் நந்தினி தயிர் பாக்கெட்டுகளில் தமிழில் ‘தயிர்’ கன்னடத்தில் ‘மோசரு’ மற்றும் போன்ற வார்த்தைகளை தவிர்த்து அதற்கு பதிலாக “தஹி” என்ற இந்தி வார்த்தையை பயன்படுத்த வேண்டும். வேண்டுமென்றால் அடைப்பு குறிக்குள் தமிழ் மற்றும் கன்னட வார்த்தைகளை பயன்படுத்தலாம் என ஒன்றிய அரசின் உணவுப் பாதுகாப்புத்துறை(FSSAI) அறிவுறுத்தியுள்ளது.
ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பு தென்மாநிலங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சமூகவலைத்தளங்களில் இந்த அறிவிப்புக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த விதியை பின்பற்றாத பட்சத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI)ஆவின் மற்றும் நந்தினி அமைப்புகளின் உரிமைகளை ரத்து செய்யும் வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக விளக்கமளித்த பால்வளத்துறை அமைச்சர் ”தயிர் பாக்கெட்டுகளில் ‘தஹி’ என இந்தியில் அச்சிட வலியுறுத்தும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI)ஏற்க முடியாது. ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் தமிழில் ‘தயிர்’ என்றே தொடர்ந்து குறிப்பிடப்படும்” என திட்டவட்டமாக தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், "எங்கள் தாய்மொழியைத் தள்ளிவைக்கச் சொல்லும் FSSAI, தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்!
மேலும் படிக்க | நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை - அமைச்சர் கே.என்.நேரு
மக்களின் உணர்வுகளை மதியுங்கள்! #StopHindiImposition
குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம்! தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள்! " என விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் இந்த காட்டமான விமர்சனத்தைத் தொடர்ந்து இந்தி மொழி குறித்த தனது அறிவிப்பை ஒன்றிய அரசின் உணவுப் பாதுகாப்புத்துறை(FSSAI) திரும்பப்பெற்றுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில், ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் இந்தியில் தஹி எனக்குறிபிட வேண்டிய கட்டாயமில்லை என்றும் ஆங்கிலத்தில் குறிப்பிட்டு அவரவர் மாநில மொழிகளிலும் அச்சிட்டுக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.