சாய்பாபா கோவிலில் உண்டியல் உடைத்து கொள்ளை - சிசிடிவி காட்சி

சென்னை எண்ணூர் அருகே சாய்பாபா கோவிலில் உண்டியல் உடைத்து கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

சாய்பாபா கோவிலில் உண்டியல் உடைத்து கொள்ளை - சிசிடிவி காட்சி

சென்னை அடுத்த எண்ணூர் பெரிய காசிகோயில் குப்பம் பகுதியில் உள்ள சாய்பாபா கோவில் உண்டியல் கடந்த வாரம் மர்ம நபர்களால் உடைத்து கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த மணிமாறன் என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர். சோதனையில் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனைதொடர்ந்து  இவர் மீது எண்ணூர் மற்றும் காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

தற்போது அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் கோவிலில் திருட்டில் ஈடுபட்ட நிகழ்வின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது