
திருச்செந்தூர் அருகே நடுநாலுமூலைக்கிணறு பத்துக்கண் பாலம் அருகே கண்ணதாசன் என்பவருக்கு சொந்தமான வாழைத்தோட்டம் உள்ளது. அதில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருச்செந்தூர் தீயணைப்புத்துறையினர், ஆறுமுகநேரி தனியார் தொழிற்சாலை தீயணைப்பு வீரர்கள் வந்து சுமார் 4-மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் ஆறுஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த ரூ. 4 லட்சம் மதிப்பிலான சுமார் ஏழாயிரம் வாழைகள் தீயில் எரிந்து சேதமாகியது.