கருணாநிதி கும்பலுக்கு என்ன கொள்கை இருக்கு..? காஷ்மீர் பிரிவினைவாதிகளையே ஒடுக்கியாச்சு... மாரிதாஸ் தில் ட்வீட்
கருணாநிதி கும்பலுக்கு என்ன கொள்கை இருக்கு என்று பாஜக ஆதரவாளர் மாரிதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

மயிலாடுதுறையில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்த வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், 7 மாவட்டங்களில் ஒரு லட்சத்து 27 ஆயிரம் ஹெக்டேர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
மழையால் பாதிப்படைந்த பயிர்களை ஆய்வு செய்த அமைச்சர் :
டெல்டா மாவட்டங்களில் கடந்த 5 நாட்களாக பெய்த தொடர்மழையால், 34 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் வேறோடு சாய்ந்து சேதமடைந்தன. உளுந்து மற்றும் பயறு வகை பயிர்களில் சுமார் 38 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் முழுமையாக நீரால் சூழப்பட்டுள்ளன.
இதையும் படிக்க : இன்று 7 மணிக்குள் சமர்பிக்க உத்தரவு... ஆனால் ஓபிஎஸ் கேட்ட கேள்வி...அப்போ அதிமுக வேட்பாளர் யார்?
இந்நிலையில் சேதமடைந்த பயிர்களை ஆய்வு செய்த அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மொத்தம் 7 மாவட்டங்களில் ஒரு லட்சத்து 27 ஆயிரம் ஹெக்டேர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும், 33 சதவீதத்திற்கு மேல் பாதிப்பு இருந்தால் இழப்பீடு குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவித்தார்.
இதேபோல் திருவாரூரில் ராயநல்லூர், கிரக்கலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நேரில் ஆய்வு செய்தார். முன்னதாக தஞ்சையில், அம்மாப்பேட்டை, உக்கடை உள்ளிட்ட கிராமங்களில், அவர் ஆய்வில் ஈடுபட்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தது குறிப்பிடத்தக்கது.
பொங்கல் பண்டிகைக்கு வேட்டி, சேலை வழங்காததே, திருப்பத்தூரில் 4 பேர் உயிரிழந்ததற்க்குக் காரணம் எனக்கூறி எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்படியில் தைப்பூசத்தை முன்னிட்டு தனியார் நிறுவனம் சார்பில் இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனால் ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் குவிந்தனர். அப்போது இலவச வேட்டி, சேலைக்கான டோக்கன் வாங்க முயன்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 10 பேர் வாணியம் பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க : திருச்சியில் பரபரப்பு...2 பெண் சடலங்கள் மீட்பு...போலீசார் விசாரணை!
இந்நிலையில் கூட்டநெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்தது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு மக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்காததால் தான் இந்நிகழ்வில் ஏராளமானோர் கூடியதாகவும், அதுமட்டுமல்லாமல் கூட்டநெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். எனவே, உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நிவாரணம், 10 லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம் மேற்கொண்டார்.
ஈரோடு இடைத்தேர்தல் :
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறவுள்ளதால் தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும் தங்களது நிலைப்பாட்டை அறிவித்து வந்த நிலையில், கடந்த ஜனவரி 31 ஆம் தேதி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
திமுக அரசுக்கு சவால் :
இத்தேர்தல் ஆளும் திமுக அரசுக்கு ஒரு மிகப்பெரிய சவால் என்றே சொல்லலாம். ஏனென்றால், கடந்த 2021ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 20 மாதங்கள் ஆன நிலையில் அவர்களின் ஆட்சி சிறந்த முறையில் நடந்துள்ளதா என்பது இந்த தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலமாகவே தெரியவரும் என்பதால், திமுக ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கு திமுக மும்மரம் காட்டி வருகிறது.
இதையும் படிக்க : 19 சதவீதத்திலிருந்து 22 சதவீதம் உயர்த்த விவசாயிகள் கோரிக்கை...!
காங்கிரஸ் வேட்பாளர் வேட்புமனுத்தாக்கல் :
அதன்படி, இடைத்தேர்தலுக்கான வியூகத்தை வகுத்த திமுக, ஏற்கனவே, ஈரோடு தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றதால் இந்த முறையும் தனது கூட்டணி கட்சியான காங்கிரஸ் - கே ஒதுக்கியது. பின்னர் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து, ஈவிகேஎஸ் இளங்கோவன் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
செந்தில் பாலாஜி வாக்குசேகரிப்பு :
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதாித்து திமுகவினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஈரோடு கல்லு கடைமேடு பகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீதிவீதியாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேரித்தார். அப்போது, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
காவிரி டெல்டா பகுதிகளில் கனமழையால் பயிர்கள் நீரில் மூழ்கியதால், நெல் கொள்முதல் விதிமுறைகளில் தளர்வுகளை வழங்கக் கோரி, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
விவசாயிகள் வேதனை:
பருவம் தவறிப் பெய்த மழையால் தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகளில், அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் மூழ்கியதை அடுத்து விவசாயிகள் வேதனையடைந்தனர்.
கடிதம்:
இந்நிலையில் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டையில் சுமார் 1 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதாக பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கொள்முதல்:
இதனால், 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யவும், முதிர்ச்சியடையாத நெல்லின் வரம்பை 5 சதவீதமாக அதிகரிக்கவும் அனுமதிக்க வேண்டும் என கடிதத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கோரிக்கை:
சேதமடைந்த நெல்லின் வரம்பை 7 சதவீதம் வரை தளர்த்த அனுமதிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: 2047ல் வல்லரசாகும் இந்தியா.......
தஞ்சையில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நேரில் ஆய்வு செய்தார்.
தஞ்சை மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 2 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கின. மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், மழை பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய அமைச்சர்கள் தலைமையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் குழுவை அமைத்தார்.
இதையும் படிக்க : 8 குண்டுகள் முழங்க அரசு மரியாதை... வாணி ஜெயராம் உடல் தகனம்...முதலமைச்சர் அறிவிப்பு!
அதன்படி, அம்மாப்பேட்டை, உக்கடை, ஆம்பலாபட்டு உள்ளிட்ட கிராமங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை அமைச்சர் சக்கரபாணி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சக்கரபாணி, தஞ்சை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 87 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெல், கடலை, உளுந்து, பச்சை பயிருகள் உள்ளிட்ட பயிர்கள் பாதிப்படைந்துள்ளது. தற்போது 19 சதவிகிதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்யப்படும் நிலையில், விவசாயிகள் 22 சதவிகிதம் வரை கேட்டு கோரிக்கை வைக்கின்றனர்.எனவே, விவசாயிகளின் கோரிக்கை குறித்து முதலமைச்சரிடம் விரைவில் தெரிவிப்போம் என்றும், மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.