75 பேர் கலந்து கொண்ட சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை...

பாஜக சார்பில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்ற 75 பேர் கலந்து கொண்ட சைக்கிள் பேரணியை மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார்.

75 பேர் கலந்து கொண்ட சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை...

சென்னை கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டி சுங்கச்சாவடியில் பாஜக சார்பில் 75 பேர் கலந்துகொள்ளும் சைக்கிள் பேரணி நடைபெற்றது. நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் பாஜக இளைஞர் அணி சார்பில் மாபெரும் சைக்கிள் பேரணியை பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்து அண்ணாமலை சைக்கிள் பேரணியில் சென்றார்.

தேசிய கொடியை ஏந்தியவாறு உத்தண்டி சுங்கச்சாவடியில் துவங்கிய சைக்கிள் பேரணி மாமல்லபுரம் வரை சென்று நிறைவடைந்தது. முன்னதாக சுதந்திர தினத்தையொட்டி மரக்கன்றுகளை நட்டுவைத்தார் அண்ணாமலை.  உடன் மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன், மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் செல்வம், செங்கல்பட்டு மாவட்ட பார்வையாளர் வேதாசுப்பிரமணியம் உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டனர்.