ஆக.23 முதல் 10-ம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

10-ம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழை ஆக.23 முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.  

ஆக.23 முதல் 10-ம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் உஷாராணி  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''பள்ளி மாணவர்களுக்குப் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2021 தொடர்பான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை வரும்  23 ஆம்  தேதி காலை 11.00 மணி முதல் 31 ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் பிறந்த தேதி, தேர்வெண் ஆகியவற்றை அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்களுக்குக் குறுஞ்செய்தி வழியாக அரசுத் தேர்வுத் துறையின் மூலம் 21 ஆம் தேதி அன்று காலை 11.00 மணிக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். எனவே, பள்ளி மாணவர்கள் www. dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தங்களுக்கான ரோல் எண், பிறந்த தேதி ஆகிய விவரங்களைப் பதிவு செய்து, தற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.